Tuesday, September 6, 2011

பெண் சிசு கொலையை தடுப்போம் - பசங்களுக்காக !!!

அது என்ன... பசங்களுக்காக?? - நம்ம கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களும் ஆண்களை விட்டு போன சில உரிமைகளும் தான் இந்த பதிவு...

கிராமங்களில் உள்ள தாத்தாக்களை பற்றி கேட்டால் .. முதல் வார்த்தை அவருக்கு 5 பொண்டாட்டி, 12 பிள்ளைகள் என்று சொல்லி சிரிப்பார்கள் என் அப்பா வயதை ஒத்தவர்கள். ஆனால் இன்றோ ஒரு பொண்ண கட்டுறதுகுள்ள நம்ம பசங்க படுற பாடு சொல்லி மாளாது.



இதுக்கு காரணம், பொண்ணு வீட்ல அதிகம் எதிர் பாக்குராங்க, மாப்பிள்ளையோட அந்தஸ்து என பல்வேறு காரணங்கள்  இருந்தாலும் , முக்கியமான காரணம் இந்த பெண்சிசு கொலை தாங்க. ( அப்டின்னு யாரும் சொல்லல .. நானா உக்காந்து யோசிச்சது ) ஆமாம் மக்களே.. 1000  ஆண்களுக்கு என்று கணக்கு பார்த்தால் மிக குறைந்த பெண்களே இருப்பதாக ஆய்வு நம் தமிழ்நாட்டில்.

முன்னாடி எல்லாம் படத்துல கூட ரெண்டு பொண்ணுங்க ஹீரோவ காதலிப்பாங்க. ஆனா இப்போ ரெண்டு பசங்க அலையோ அலையின்னு அலையிறாங்க. படத்த விடுங்க, நாம ரோட்டல பாக்குற காட்சிகளை பார்த்தால், ஒட்டவே ஒட்டாத ஜோடிகளை பார்த்தால்( நம்ம பசங்க பைக் பின்னால இருக்குற பொண்ணுங்க முகத்தை தப்பித்தவறி பார்த்தால், காதல் எனக்கு புலப்படவில்லை.  பெண்களின் கணக்கு விகிதம் தான் தோனுகிறது எனக்கு), இணையத்தில் வரும் காதல் தோல்வி கவிதைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோணுகிறதோ இல்லியோ! என் கணக்கு எல்லாம் பெண்ணுக்கு பஞ்சம் வந்துவிட்டது. ( இப்பவே ஊர்வழக்குகளில் பேசி கொள்கிறார்கள் ' பொண்ணுக்கு நீங்க எதாவது போட்டுத்தான் கட்டிக்கிட்டு போகணும்).

இன்னும் கொடுமை என்னன்னா... ஒருத்தருக்கு ஒருத்தர் அறியாமல் ஒரே பொண்ண லவ் பண்ணி சண்டபோட்டுகிட்ட நண்பர்களும் இருக்காங்க.. ரெண்டு பையன்கிட்ட ஒரே மாதிரி பேசுற ஒரு பொண்ணும் இருக்குங்க... அப்புறம் இதோட விளைவுகளா-முறைகேட்ட உறவுகளை நம்ம சமுதாயம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ( தினத்தந்தி படிச்சா தெரியும் ... பக்கத்துக்கு பக்கம்.. கள்ள உறவுகளின் ஓட்ட பந்தயம் .... பலி ... அப்பப்பா ... எவ்ளோ பக்கவா நியூஸ் புடிக்கிறாங்க)

இதிலிருந்து சங்கலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....
நம்ம பசங்களோட நலன் கருதியாச்சும்... பெண் சிசு கொலையை தடுப்போம் ....
              ஒரு நல்ல விசயத்தை எப்படியெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு ...