உண்மைதான்..... நாங்கள் கிணற்றுதவளைகலாணோம்!
தற்போதைய சூழ்நிலையில்... தமிழனாய் நான் வெட்கப்படுகிறேன்.
மழை வரும்போதெல்லாம் கூச்சலிடும் தவளைகள்போல...
தமிழனுக்கு இடர் வரும்போதெல்லாம் ....
ஒன்று சேர்ந்து உருமுகிறோம் ..... கேட்பாரில்லை!
கத்தி கத்தி கண்டனம் தெரிவிக்கிறோம் ... கேட்பாரில்லை!
உடலை கொளுத்தியும் கொண்டோம்... கேட்பாரில்லை!
"செவிடன் காதில் ஊதிய சங்கை போல" - செவிடனாய்
இருந்தாலும் கூட நம்மை திரும்பி பார்த்திருப்பான்!
இவர்கள் செவிடர்கள் அல்ல..! போல் நடிப்பவர்கள் !
நாம் ஊதினால் மட்டும் அல்ல. உலக்கையால் குத்தினால்
கூட கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஒரே ஒரு தாலிக்காக எத்தனை தாலிகளை இழந்துவிட்டோம்???
தாலியை மட்டுமா ? எங்களின் தாய்மார்களையும் சேர்த்தே
அல்லவா... இழந்துவிட்டோம்.
எங்கள் பிஞ்சுகளின் முகத்தை பார்த்தும் இவர்கள் வருந்தவில்லை
என்றால்.. இவர்கள் இரும்பு இதயம் படைத்தவர்களா???
இல்லை ..இல்லை ... இதயமே அற்றவர்கள். இந்த இதயம்
அற்றவர்களிடம் இரக்கத்தை வேண்டி என்னும் எத்தனை முறை
பயணிக்க போகிறோம் என்று தெரியவில்லை.....
என்ன செய்வது ... நாங்கள்தான் கிணற்றுதவளைகளே உங்களுக்கு..
எங்களின் உயிர் - உங்களுக்கு அரசியல் வியாபாரம் ஆனது ..
எங்களின் இழப்புகள் - உங்களுக்கு போழுதுபோக்கனது.
எங்கள் தாய்மார்களின் கற்பு - உங்களுக்கு காட்சி பொருளானது.
உங்களை திட்டுவதருக்கு எம்மொழியில் இனி வார்த்தைகளும் இல்லை!
எங்களுக்கு யோகிதையும் இல்லை!
எங்களின் உயிரை நாங்கள் அல்லவா காப்பற்றி இருக்கவேண்டும்?
எங்களின் தாய்மார்களின் மானத்தை நாங்கள் அல்லவா காத்து நின்றிருக்கவேண்டும்? - நாங்கள் கையாலாகதவர்கள்!
பாதி இனம் அழிந்த பிறகும், இன்னும் கத்தி கொண்டே இருகிறோம்...
காயமடைந்தவர்கலயாவது காப்பாற்றுங்கள் என்று !
உடன்பிறப்புகளே..! கண்மணிகளே... ! என்று எவனாவது என் வீட்டின் முன்
ஓட்டுக்காக வந்து நின்றால் ... நிச்சயம் சாணியால்தான் அடிப்பேன்...
மானம் கெட்டவர்கள்!
பணம் என்பது வேறு ! எங்கள் பாமர மக்களின் உயிர் வேறு என்பது கூடவா
புரியவில்லை இங்கே பகுத்தறிவு பேசுபவர்களுக்கு.
எங்களுக்கு மானம் என்று ஒன்று இருந்திருந்தால் அன்றே
முதுக்குமாரர்களோடு சேர்ந்தே எரிந்திருக்க வேண்டும் !
உண்மையாய் நாங்கள் மானம் கெட்டவர்கள் !
மானம் இழந்தபின் பிணமாய் அலைந்துகொண்டிருக்கிறோம்!
எங்கள் உறவுகளுக்கு உயிர் கொடுங்கள் என்று!
நமக்கெல்லாம் அடுத்த வீட்டில் எரிந்தால் செய்தி!
நமது வீட்டில் எரிந்தால்தான் 'தீ' அல்லவா?
தமிழா சுற்றத்தாரோடு அழுது ஆறுதல் சொல்ல மட்டுமே
பழகிகொண்டுவிட்டோமே? -"நம்மால் வேறு என்னதான்
செய்ய முடியும்!"- இந்த பணம் தின்னும் பிணந்தின்னிகளின் மத்தியில்!
வெள்ளயர்கள்! மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டனர் !
நெஞ்சில் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று !
பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது இந்த பாதகத்தியை.
வரலாற்றை புரட்டும் போதெல்லாம் .. மவுனமாய் சிரிப்பேன்...
பெண்ணால் சாம்ராஜ்யமே சரிந்தது எனும் வாரத்தைகளை கடக்கும்போது!
இப்போது வலிகிறது ! கொலைகாரி சாய்த்துவிட்டாலே எங்கள் சத்திரியனை!
பெண்மை கொஞ்சம் இருந்திருந்தால், எங்கள் பெண்மணிகள் அழிந்திருக்கமாடர்கள்!.
இதயம் என்று இருந்திருந்தால், எங்கள் பிஞ்சுகளின் உதடுகளில்
புன்னகை மறைந்திருக்காது!
உன் ரத்த சொந்தகளுக்கு ஒன்று என்றால்தானே- உன் சதை கூட ஆடும்!
வெறும் கல்லை அல்லவா.. கரைக்க பார்க்கிறான் தமிழன்!
வேண்டாம் தமிழா ... இவர்களை நாடி அணிவகுப்பு!
இனியும் என்னிடத்தில் வலுயில்லை! இவர்கள் நடத்தும் நாடகத்தை பார்க்க!
பிஞ்சு குழந்தைகளே .... எங்களை மன்னித்துவிடுங்கள்....
தாய்மார்களே ... எங்களை மன்னித்துவிடுங்கள்......
வீரவித்துக்களே .... எங்களை மன்னித்துவிடுங்கள் ....
இந்த ஈன பிறவி எடுத்து ஏதும் பயனற்றதாய் போனதால் .....
அடுத்த முறையாவது .... நாங்கள் ஈழத்தில் பிறக்க ஆசைபடுகிறோம்....
ஈழ தமிழனாய் இருக்க ஆசைபடுகிறோம்...... அதுவரை உங்களுக்காக
குரல் கொடுத்தாவது துயரை ஆற்ற முயற்சிக்கிறோம்!