போன வார இறுதி நாட்கள் என்னை அட....போடா வைத்த வாரம்.
அப்படி என்ன சென்னையில் புது பொலிவு?- என்று ஆர்வ பாடுபவர்க்குஇரண்டு செய்திகள்!
முதல் ஒன்று :
கடந்த வாரம் சனிகிழமை பெசென்ட் நகர் பீச்சில் நடைபெற்ற கிராமிய
கலை நிகழ்ச்சி. உண்மையில் கைதட்ட வைத்த ரகம். அத பார்க்க நம்ம காதலர்களுக்கு ஏது டைம்? - அவுங்க அவுக வேலைய பார்க்க கிரமிய நிகழ்ச்சி அது ஒரு பக்கம் கலைகட்டுது. என்ன ஒரு கொடுமைன்ன?? - அவுங்க கஷ்டப்பட்டு மறைந்து போகிற கலையை மக்கள் முன் காட்டி நிலைக்க வைக்க -- அங்கே ரசித்த உள்ளங்கள் 15. ( என்ன கொடும சார் இது?)
நம்ம சைதாபேட்டையில் உள்ள கே.வி.எஸ் கார்டன் பக்கத்துல உள்ள
கருமாரியம்மன் கோவில்ல திருவிழா.( அதுதான் வருஷ வருஷம் நடக்குதே). அங்கே கண்ட காட்சிகள் அப்படியே நம்மை கிராமத்துக்கு அழைத்து செல்லும் என்பது உண்மை. பால்குடம் தூக்கி, அலகு குத்தி, உடல் முழுவதும் வேல் குத்திக்கொண்டு ஊர்வலம் வந்தகாட்சி கண்ணை வருத்த கூடிய நிகழ்ச்சி.( எப்டிதான் முடியுதோ???)
No comments:
Post a Comment