Sunday, August 7, 2011

அண்ணா யுனிவர்சிட்டியா...? கார்ப்ரேசன் குப்பை தொட்டியா..?

அண்ணா யுனிவர்சிட்டியில் கலந்துரையாடல், அதாவது கவுன்சிலிங்
என்றால் மாணவர்களும் பெற்றோர்களும் வந்து குவிவார்கள்
என்றால், அனைத்து கல்லூரியின் விளம்பரசீட்டு அல்லவா?? வந்து
குவிந்து கிடக்கிறது....குப்பை மேடாக ...பல்கலைகழக வாயில் முழுவதும் ....

சுத்தம் சோறு போடும்.. சுற்றுசூழலை பாதுகாப்போம் .. என்று
பலகைகளில் மட்டும் எழுதி வைத்துவிட்டு.....இதை கண்டும்
காணாமல் விட்டு விட்டார்கள் ஏன்??

யுனிவர்சிட்டி எப்படி இருக்குமோ? கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்குமோ ?
என்று பல கனவுகளுடன் வரும் மாணவர்களுக்கும், பிள்ளைகளின் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைக்க வரும் பெற்றோர்களுக்கும், பலகலைகழக வாயிலில் காட்டும் முன்னோட்டம் எவ்வளவு அழகு??? 
கண்ட இடமெல்லாம் .... காகித அட்டைகள் .....

கல்வியானது வியாபர நோக்கத்துடன் பெருகி கொண்டிருக்கும் .. இந்த தருணத்தில்...விளம்பரத்திற்காக அவர்கள் செய்யும் வேலையை அவர்கள் நிறுத்தமாட்டார்கள்!.. கண்ட இடங்களில் குப்பைகளை போடும் பழக்கத்தை நம்மவர்களும் விடமாட்டார்கள்!! குறைந்தபட்ச தீர்வாக.... சில குப்பை தொட்டிகளையாவது நமது பல்கலைகழக நிர்வாகம் பஸ்ஸ்டாப் முதல் வாயில் வரை வைத்திருந்தால், கொஞ்சம் நன்றாய் இருந்திருக்கும.
கொஞ்ச குப்பைகளையாவது மற்றவர் பார்வையிலிருந்து
மறைத்திருக்கலாம் ....

பல கனவுடன் பல்கலைகழகத்தை காணவரும் மாணவர்களுக்கு,
ஒரு நல்ல அபிப்பிராயம் வரட்டுமே ...

ப்ளீஸ் ... எதாவது நடவடிக்கை எடுங்களேன்...

No comments:

Post a Comment